| ADDED : டிச 29, 2025 07:28 AM
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சுவாமி ஊர்வலம் நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த, 26ல் திருவெம்-பாவை, அபிஷேகம் மற்றும் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், நடராஜ மூர்த்திக்கு திரு-வெம்பாவை பாடுதல் மற்றும் மஹா தீபாரா-தனை நடந்தது. பின், கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. வரும் ஜன., 2 காலை, 9:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 4:30 மணிக்கு பிச்சாண்டார் திருவீதி உலாவும், இரவு, 9:00 மணிக்கு அம்மன் தீர்த்தவாரிக்கு அம-ராவதி ஆற்றுக்கு போய் வருதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.வரும், 3 அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்-திக்கு மகா அபிஷேகமும், 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், மதியம், 3:00 மணிக்கு கோவில் முன், சித்சபா பிரவேசம் என்ற, மட்டை-யடி திருவிழாவும் நடக்கிறது.