உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து குறைந்தது

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து குறைந்தது

கரூர், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,627 கன அடி தண்ணீர் வந்தது. அதில் டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 2,797 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.47 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.* கரூர் மாவட்டத்தில் கடந்த, 24 மணி நேரத்தில் கரூரில், 2.20, அணைப்பாளையம், 3, குளித்தலை, 4.20, தோகைமலை, 8.40, மாயனுார், 3, பஞ்சப்பட்டி, 3.60, பாலவிடுதியில், 5 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ