மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
12 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
12 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
12 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
12 hour(s) ago
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த விவசாயி முனிராஜ், 68. இவரது மூத்த மகள் சின்ன புட்டம்மாவின் மகன் வேல்முருகன், 18; பிளஸ் 2 மாணவன். இவருடன் முனிராஜ் டூ - வீலரில், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். மத்திகிரி கால்நடை பண்ணை அருகே, இரு டூ - வீலர்களில் வந்த மூவர் மறித்து, முனிராஜை அரிவாளால் வெட்டி கொன்று தப்பினர். மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.கிராமத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து போலீசுக்கு முனிராஜ் தகவல் தெரிவித்து வந்துள்ளார். சின்ன பேளகொண்டப்பள்ளியில் சிலர், கர்நாடகா மாநில மது வகைகளை விற்பதாக தகவல் தந்துள்ளார். ஆத்திரமடைந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சின்ன பேளகொண்டபள்ளியை சேர்ந்த நாகராஜ், 55, என்பவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago