உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பட்டாளம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்

பட்டாளம்மன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் கிராம தேவதை பட்டாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கூழ் மற்றும் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து வந்தனர்.அவர்கள் கெலமங்கலம் நான்கு வழிச்சாலை, துளசி நகர், ஜீவா நகர் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பட்டாளம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவில் கமிட்டி நிர்வாகி சென்னபசப்பா, டவுன்பஞ்., தலைவர் தேவராஜ் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ