உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு முருக்கம்பட்டி- கன்னிப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதிலிருந்த டிரைவர் தப்பி சென்றார். வாகனத்தை சோதனை செய்ததில், கிரவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்தார். அதேபோல், இரவு, 8:00 மணிக்கு அதே பகுதி வழியாக, கடத்தி வரப்பட்ட கிரவல் மண்ணுடன், மற்றொரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை