உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 11 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. கிருஷ்ணகிரி டவுன் போலீசார் எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த அதே பகுதியை சேர்ந்த நித்யானந்தன், 30 மற்றும் 5 பேர் உள்பட மொத்தம், 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல வேப்பனஹள்ளி அடுத்த ஜோடுகொத்துாரில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய அந்த பகுதியை சேர்ந்த ராஜா, 34 மற்றும் 4 பேர் என மொத்தம், 5 பேர் மீது வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்