உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 3 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர்.எனவே, மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை