மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
5 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
5 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
5 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
5 hour(s) ago
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மைய பகுதியில், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரும், ஜூன் 5- வரை, 'ட்ரோன்'கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பகுதிகளில் எவ்வித 'ட்ரோன்'களும் பறக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago