உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்டாக் டிரேடிங் செய்தால் அதிக லாபம் எனக்கூறி ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி மோசடி

ஸ்டாக் டிரேடிங் செய்தால் அதிக லாபம் எனக்கூறி ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம் ரூ.1.06 கோடி மோசடி

கிருஷ்ணகிரி: ஓசூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆடிட்டரிடம், 'ஸ்டாக் டிரேடிங்' செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, 1 கோடியே, 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர், காந்திநகரை சேர்ந்தவர் சபரிநாதன், 65; ஆடிட்டராக பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த, ஏப்.,11ல், ஒரு யு.ஆர்.எல்., லிங்க் வந்தது. அதில், நாங்கள் அனுப்பியுள்ள, 'லிங்க்'கில் உள்ள கம்பெனி பொருட்களை, 'ஸ்டாக் டிரேடிங்' செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய சபரிநாதன், அவர்கள் அனுப்பிய 'லிங்க்'கிலிருந்து 'மொபைல் ஆப்' பதிவிறக்கம் செய்து அவர்கள் கூறிய வங்கி கணக்கில் பணம் போட்டார். சில நாட்களில் அதிக லாபம் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குகளில், நான்கு தவணைகளாக மொத்தம், 1 கோடியே, 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். அதன் பின் அவரது இணையதள பக்கங்கள் முடங்கின. அவரை தொடர்பு கொண்ட எண்கள் அனைத்தும் 'சுவிட்ச் ஆப்' ஆனது.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ