உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேக்ளா பந்தய அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

ரேக்ளா பந்தய அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மேலுார் அருகே கீழையூர் கோபாலகிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆக.,26 ல் கீழையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி, பாதுகாப்பு கோரி கலெக்டர், கீழவளவு போலீசில் மனு அளித்தோம்.பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மாட்டு வண்டி பந்தயத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக இந்நீதிமன்றம் ஒரு வழக்கில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அதை பின்பற்றி நிபந்தனைகளுடன் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை