உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

வில்லுப்பாட்டு பயிற்சிமதுரை: டி.கல்லுப்பட்டி கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் வில்லுப்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்வர் செந்தில்குமார், தாளாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் பார்வதி பேசினார். மாணவர்களுக்கு வில்லுப்பாட்டு கலைஞர் வெங்கடேஸ்வரி பயிற்சி அளித்தார்.தொழில் வழி காட்டுதல் கருத்தரங்குதிருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் அமைப்பு, மக்கள் தொடர்பு பிரிவு, தொழில்முறை வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் தொழில் வழிக்காட்டுதல் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் சீனிவாசன் துவங்கி வைத்தார். தேசிய தரநிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். மதுரை தொழில்முறை வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் உதவி இயக்குநர் கலைச்செல்வம், இளைய வேலைவாய்ப்பு அதிகாரி லட்சுமி ஆகியோர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்ற தலைப்பில் பேசினர். பேராசிரியர்கள் சுமித்ரா, ஞானகுரு ஏற்பாடு செய்தனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை