உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருப்பரங்குன்றத்தில் இன்று தேரோட்டம் மாலையில் மகாதீபம்

 திருப்பரங்குன்றத்தில் இன்று தேரோட்டம் மாலையில் மகாதீபம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று (டிச. 3) மாலை 6:15 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் தேரோட்டம் நடக்கிறது. ஏடுகொடுக்கும் விழா கார்த்திகை திருவிழா எட்டாம் நாளான நேற்று காலையில் நடராஜர், சிவகாமி அம்மன் தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடாகி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். நடராஜர் கையில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று சிவகாமி அம்பாள் திருக்கரத்தில் சாத்துப்படி செய்தனர். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் சேர்த்தி சென்றனர். பட்டாபிஷேகம் கார்த்திகை பட்டாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆறு கால் பீடத்தில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல் சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சாரியாரிடம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜைக்கு பின்பு சுவாமியின் தங்கக் கிரீடத்திற்கு அபிஷேகம் முடிந்து சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்து கரங்களில் செங்கோல், வெள்ளிச் சேவல், மயில் கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன. தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இன்று மகாதீபம் காலை 7:00 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு மேல் மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை