உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனியில் போட்டி: ரவீந்திரநாத் உறுதி

தேனியில் போட்டி: ரவீந்திரநாத் உறுதி

பாலமேடு, : பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் பின்புறம் எம்.பி., நிதி ரூ.10 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கோபுர விளக்கை தேனி எம்.பி., ரவீந்திரநாத் துவக்கி வைத்தார். பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், ஜோதி முருகன் முன்னிலை வகித்தனர்.ரவீந்திரநாத் கூறியதாவது: வாடிவாசல் பின்புறம் உயர்கோபுர மின் விளக்கு தேவை என்றவுடன் 10 நாட்களுக்குள் நிதி ஒதுக்கி போட்டி நடக்கும் 2 நாட்களுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். தேனி தொகுதியில் மீண்டும் நிச்சயம் போட்டியிடுவேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை