உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை விமான நிலையத்தில் மங்கி பாக்ஸ் காய்ச்சல் ஆய்வு

மதுரை விமான நிலையத்தில் மங்கி பாக்ஸ் காய்ச்சல் ஆய்வு

மதுரை : 'மங்கி பாக்ஸ்' வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மதுரை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் 'மங்கி பாக்ஸ்' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து வரும் வெளிநாட்டினர், உள் நாட்டினருக்கு தொடர் பரிசோதனை செய்யப்படுவதாக மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுரு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஆப்பிரிக்க நாடுகளுக்கு 21 நாட்களுக்குள் சென்று வந்தவர்களுக்கு 'மங்கி பாக்ஸ்' காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காலகட்டத்தை போல டில்லி விமான நிலையத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தவர்களுக்கு காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. விமான பயணிகள் எங்கிருந்து வருகின்றனர் என அவர்களது பயண விபரங்கள் கேட்டறிகிறோம். காய்ச்சல், தோலில் தடிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தப்படுவர். ஆக. 17 முதல் தற்போது வரை மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் இதுவரை யாருக்கும்' மங்கி பாக்ஸ்' அறிகுறி கண்டறியப்படவில்லை. ஒருவேளை மதுரையில் 'மங்கி பாக்ஸ்' அறிகுறியுடன் யாரேனும் கண்டறியப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதற்கென இங்கு சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுஉள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி