உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயன்படாமல் வீணான அடிபம்பு குழாய்கள்

பயன்படாமல் வீணான அடிபம்பு குழாய்கள்

டிகல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அமைக்கப்பட்ட அடிபம்பு குழாய் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த ஒன்றியத்தின் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வழங்கும் அடிபம்பு குழாய் உள்ளது. பெரும்பாலும் இக்குழாய்கள் சேதமாகி கிடக்கின்றன. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தரை மோசமாக உள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் நீடிக்கிறது. அடிபம்பை சீரமைக்கக் கோரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் முறையிட்டும், நடவடிக்கை இல்லையென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை