| ADDED : ஜூலை 07, 2024 07:11 AM
எருமப்பட்டி, : வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எருமப்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவபாக்கியம், 63; இவர், கடந்த, 10 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு ஓசூரில் உள்ள, தன் மகன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நி-லையில், நேற்று காலை, வீட்டிற்கு வந்த சிவபாக்கியம், வீட்டை திறந்து உள்ளே சென்றார்.அப்போது, ஓடுகளை கழட்டி வைத்து விட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, 10 பவுன் நகை, 1,000 ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்-றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, எருமப்பட்டி போலீசில், சிவபாக்கியம் புகாரளித்தார்.அங்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள, 'சிசி-டிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.