உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம் கரையோர பகுதியில் இன்று துவக்கம்

வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம் கரையோர பகுதியில் இன்று துவக்கம்

குமாரபாளையம்: ''குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில், இன்று முதல் வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம் தொடங்க உள்ளது,'' என, தாசில்தார் சிவக்குமார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:மேட்டூர் அணையில் இருந்து, 5,000 கன அடி தண்ணீர், நாளை (இன்று) முதல் திறந்துவிடப்பட உள்ளது. அதனால், குமாரபா-ளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம், நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளனர். இதை-யொட்டி பிரசார வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. காவிரி கரையோர பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பா-ளையம், வேதாந்தபுரம், கலைமகள் வீதி, புத்தர் வீதி, பாலக்-கரை, மணிமேகலை வீதி உள்ளிட்ட பகுதிகளில், வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம் செய்யவுள்ளனர்.காவிரியில் அதிக நீர் வரத்தாகி, கரையோர பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள், அரசு பள்ளி வளாகங்கள் தயார் நிலையில் உள்ளன. குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகா-ரிகள், கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவ-னிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ