உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

ஆவணி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லால் ஆன, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுவா-மிக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடபிறப்பு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட மிக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.அதன்படி, நேற்று ஆவணி முதல் ஞாயிறையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்-தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்-காய்த்துாள், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற-வற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்-கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை