| ADDED : ஜன 22, 2024 12:28 PM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆனந்தாஸ்ரமத்தில் பெத்தன்ன சுவாமிகள் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 11ல் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் வேணுகோபால் சுவாமி கோவிலில் கோமாதா பூஜையும், கங்கா, காவிரி தீர்த்தக்குட ஊர்வலமும் நடந்தது. மாலை திருவிளக்கு பூஜையும் நடந்தது. சனிக்கிழமை காலை வேதபாராயணம், திருமுறை, சிவ பஞ்சம வேத ஹோமங்கள், மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை சங்கீத கீர்த்தனைகளும் நடந்தன. நேற்று காலை, 11:00 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மார்ச், 9 வரை மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பெத்தன்ன சுவாமிகள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.