உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி

மனைவி கை தவறி வெந்நீர் கொட்டியதால் கணவன் பலி

குமாரபாளையம்: குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் உதயகுமார், 40; கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 39. தம்பதியருக்கு சுமித்ரா, பவித்ரா என, இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.கடந்த, 23, இரவு, 7:00 மணிக்கு கணவர் உதயகுமார் குளிப்பதற்காக பிரியா வெந்நீர் வைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது கை தவறி, அங்கு உட்கார்ந்திருந்த உதயகுமார் மீது வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்தார். பின், ஈரோடு தனியார் மருத்துவமனையில், உதயகுமாரை சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை