உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

கால்நடைகளின் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி: கலெக்டர்

நாமக்கல்: 'கால்நடைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை, கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர், தங்கள் கால்நடைகளை தீவிர சிகிச்சைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையால் ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.இந்த வசதி தேவைப்படுவோர், 04286-266491 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, கால்நடை மருத்துவமனைக்கும், தங்கள் இடத்துக்கும் போகவர ஆகும் தூரத்துக்கான உரிய கட்டணத்தை (தற்போதைய கட்டணம் கி.மீ.,க்கு எட்டு ரூபாய்) செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை