உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் வழங்கல்

சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.50 லட்சம் வழங்கல்

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றியம், பல்லக்காபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள, 6.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் விழா நடந்தது. இதற்கான காசோலையை அக்குழு தலைவிகளிடம், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் நாச்சிமுத்து வழங்கினார்.மேலும், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அதிகாரத்தை நோக்கமாக கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள தொகையை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கூறினார். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி