| ADDED : டிச 06, 2025 06:18 AM
நாமக்கல்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் நலச்-சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். எஸ்.சி.,-எஸ்.டி., தொழிலாளர் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்-பாளர் சீனிவாசன், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் மருதபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல், மாற்று முகமை மூலம் செயல்ப-டுத்த வேண்டும். இந்த திட்டத்தை பணியாளர்கள் மீது திணிக்கக்-கூடாது. 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்-களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். டாஸ்மாக் பணியில் இருந்தபோது உயிரிழந்த குடும்-பங்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.