உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கர்சீப் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

கர்சீப் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

குமாரபாளையம்: குமாரபாளையம், முருங்கைக்காடு பகுதியில், 'கர்சீப்' தயா-ரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஸ்ராஜ், 41. இவர் கடந்த, 11 இரவு, 7:00 மணியளவில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை, அலுவலக லாக்கரில் வைத்துச்சென்றார். மறுநாள் காலை, 9:00 மணியளவில் இவரது அலுவலக மேலாளர் தனசேகரனுக்கு வந்த போன் அழைப்பில், 'அலுவலக பின்புற தகர சீட் உடைக்கப்-பட்டு, லாக்கர் கீழே வீசப்பட்டுள்ளது' என, தகவல் வந்தது. சம்-பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவ-ணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகார்-படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்