உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு

ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே திம்மம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டான், 65. இவரது மனைவி முருகம்மாள், 60. இந்த தம்பதியினர் தங்களது வீட்டில் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனிடையே, இவரது வீட்டில் சினையாக இருந்த வெள்ளாடு ஒன்று, ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது. ஆடு பிரசவத்தின் போது 1 முதல் 3 குட்டிகளை போடுவது வழக்கமான ஒன்று. ஆனால் கிட்டானின் ஆடு, ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்றது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ