உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை போராடி உயிர் தப்பியது

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை போராடி உயிர் தப்பியது

கூடலுார் : கூடலுார் அருகே ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை மழை வெள்ளத்தில் சுமார், 300 மீட்டர் வரை அடித்து செல்லப்பட்டு போராடி உயிர் தப்பியது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் அவ்வப்போது மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. கூடலுாரில் உற்பத்தியாகி, கேரளா செல்லும் பாண்டியார்-புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகள், நீரோடைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஓவேலி தர்மபுரி பகுதி வழியாக செல்லும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் காலை அந்த ஆற்றை நான்கு காட்டு யானைகள் கடந்து சென்றுள்ளன. அதில், பெண் யானை ஒன்ருறு நிலைத்தடுமாறி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிருக்கு போராடி தத்தளித்தது. சுமார், 300 மீட்டர் துாரம் வரை அடித்து செல்லப்பட்ட யானை, போராடி நீந்தி ஆற்றின் கரைக்கு சென்று உயிர்த்தப்பியது. இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்கள் எடுத்த 'வீடியோ' நேற்று வெளியாகி வைரல் ஆனது. மழை தொடர்வதால், வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ