உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செந்நாய் குட்டி பலி வனத்துறை விசாரணை

செந்நாய் குட்டி பலி வனத்துறை விசாரணை

கூடலுார், : மசினகுடி, சீகூர் வனப்பகுதியில் செந்நாய் குட்டி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதுமலை, மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், சீகூர் வடக்கு வனப்பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில், செந்நாய் குட்டி காயத்துடன் இறந்து கிடந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.துணை இயக்குனர் அருண்குமார், வனவர் மசினன் அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'பிறந்து, ஆறு மாதமான, ஆண் செந்நாய் குட்டி, மாமிசம் உண்ணி தாக்கியதில் உயிரிழந்துள்ளது. ஆனாலும், அதன் உடல் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை