உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறப்பு வைப்பு தொகை சேகரிப்பு முகாம் துவக்கம்

சிறப்பு வைப்பு தொகை சேகரிப்பு முகாம் துவக்கம்

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு வைப்புத் தொகை சேகரிப்பு மற்றும் சிறப்பு கடன் முகாம் இன்று துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில், சிறப்பு வைப்புத் தொகை சேகரிப்பு முகாம் மற்றும் சிறப்பு கடன் முகாம் இன்று, 15ம் தேதி துவங்கி, 19, 21, 25 மற்றும் 28ம் தேதிகளில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 22 கிளைகள், 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மூன்று மலைவாழ் மக்களுக்கான பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் நடைபெற உள்ளது. அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை