| ADDED : ஆக 14, 2024 08:43 PM
ஊட்டி : ஊட்டி நகரில் கால்நடைகள் அதிகளவில் உலா வருவதால் உள்ளூர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊட்டியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை உள்ளது. இதனால், நகர சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கையும், பொது மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நகரின் முக்கிய சாலைகளான, கமர்ஷியல் சாலை; தாவரவியல் பூங்கா சாலைகளில், மாடுகள், குதிரைகள், நாய்கள் அதிகளவில் உலா வருகின்றன. வாகனங்களை இயக்க டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.சில நேரங்களில் நாய்கள் சுற்றுலா பயணிகளை துரத்தி செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.