| ADDED : ஆக 09, 2024 01:45 AM
கூடலுார்:முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் குட்டி மற்றும் பெண் யானை இறந்து கிடந்தன.முதுமலை, மசினகுடி கோட்டம், மசினகுடி வனத்தில் வன ஊழியர்கள் இரு நாட்களுக்கு முன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மரம் விழுந்து பெண் யானை உயிரிழந்தது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். துணை இயக்குனர் அருண், வனச்சரகர் பாலாஜி ஆய்வு செய்தனர். உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேதபரிசோதனை செய்தார்.* மசினகுடி சீகூர் வனப்பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியின் போது, அழுகிய நிலையில் குட்டி யானை இறந்து கிடந்தது. அதிகாரிகள் ஆய்வுக்குப்பின், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில்,'மசினகுடி வனத்தில் இறந்த பெண் யானைக்கு, 30 வயது இருக்கும். பலத்த காற்றின் போது சாய்ந்த மரம் விழுந்து, யானை உயிரிழந்துள்ளது. மேலும், சீகூர் பகுதியில் பிறந்து ஆறு மாதமான, குட்டி யானை உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்ததுக்கான காரணம் தெரியவில்லை. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின்பே, இறப்புக்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.