மேலும் செய்திகள்
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
11-Dec-2025
ஊட்டி;நீலகிரியில், 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நீலகிரி கலெக்டர் அருணா கூறுகையில்,''நீலகிரியில், 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.
11-Dec-2025