உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.ராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 20ல் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரு படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று அம்மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த 7 மீனவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து அவர்களை விடுதலை செய்தது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் எல்லை தாண்டி வந்து கைதானால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. விடுதலையான மீனவர்களை கொழும்பு அருகே முகாமில் போலீசார் தங்க வைத்தனர். இவர்கள் ஒரு சிலநாட்களில் விமானத்தில் சென்னை வர உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை