உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் சூறாவளியால் படகு சவாரி தாமதம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

பாம்பனில் சூறாவளியால் படகு சவாரி தாமதம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சூறாவளி காற்றால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் வனத்துறை படகு சவாரி தாமதமானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.பாம்பன் குந்துகால் கடற்கரையில் வனத்துறையின் சுற்றுலா படகு சவாரி மையம் உள்ளது. இங்கிருந்து ஒரு கி.மீ., துாரத்தில் மன்னார் வளைகுடா கடலில் அமைந்துள்ள குருசடை தீவுக்கு படகில் சென்று வர ஒரு நபருக்கு ரூ. 300 வசூலிக்கப்படுகிறது. நேற்று பாம்பனில் சூறாவளி காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை குந்துகாலில் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். மதியம் 12:10 மணிக்கு பிறகு காற்றின் வேகம் தணிந்ததும் கடல் அலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பிறகு சுற்றுலா படகு இயக்கப்பட்டது. பல சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து கடலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா படகு தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை