மேலும் செய்திகள்
பா.ஜ., தெருமுனை பிரசாரம்
2 minutes ago
கோயில் உண்டியல் உடைப்பு
5 minutes ago
ராமேஸ்வரம்: தொடர்விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அறிவித்ததால் தமிழகத்தில் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகின்றனர். நேற்றும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்துவிட்டு அக்னி தீர்த்தத்தில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் நேற்றும் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 minutes ago
5 minutes ago