உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தர்காவில் கந்துாரி விழா

 தர்காவில் கந்துாரி விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாணி கிராமத்தில் உள்ள செய்யது ஹாதி ஒலியுல்லா தர்காவில் கந்துாரி விழாவில் கறிவிருந்து நடந்தது. தர்காவில் நேர்த்திக் கடன் நிறைவேறிய பின்பும், நிறைவேற வேண்டியும் கிடாய் வெட்டி பொதுமக்களுக்கு கூட்டு கறி விருந்து வழங்குவது வழக்கம். வாணி கிராமத்தைச் சார்ந்த முகமது ஜஹார்தீன் குடும்பத்தின் சார்பில் கந்துாரி விழா நேற்று நடந்தது. முன்னதாக செய்யது ஹாதி ஒலியுல்லா தர்காவில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. வாணி கிராம ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன், அசன் கனி மற்றும் சுற்றுப்புற கிராமப்புற மக்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை