உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சிறுதானிய பயிர்கள் சாகுபடி கமுதி விவசாயிகள் ஆர்வம்

 சிறுதானிய பயிர்கள் சாகுபடி கமுதி விவசாயிகள் ஆர்வம்

கமுதி: கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக மிளகாய், சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். சிறுதானிய பயிர் களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் சிறுதானிய பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். கமுதி அருகே பேரையூர், நெறிஞ்சிப்பட்டி, இலந்தைகுளம், பாக்கு வெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்கின்றனர். அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து இருந்தது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிறுதானிய பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி