உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.12 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

ரூ.12 லட்சம் பறித்த வழக்கு மேலும் ஒருவர் சிக்கினார்

சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டியில் வங்கி ஊழியர்களிடம், 12 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இந்த வழக்கில், அம்மாபேட்டை போலீசார், 4 பேரை கைது செய்-தனர். மேலும், 4 பேரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சித்திக் அலி, நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்பு-டைய திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்த அலெக்ஸ் என்பவர், வேறு வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருப்-பது தெரிந்தது. அவரை, அம்மாபேட்டை போலீசார், இந்த வழக்-கிலும் கைது செய்தனர். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை