உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருவமழை முன்னெச்சரிக்கையாக திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

பருவமழை முன்னெச்சரிக்கையாக திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

சேலம்: சேலம் சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணி-முத்தாறு, சேலம் மாநகரின் மைய பகுதிகள் வழியே, 120 கி.மீ., பயணித்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் காவிரியில் கலக்கி-றது.சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான ஓடைகள், கால்வாய்கள் திருமணிமுத்தாற்றில் இணைகின்றன. இதனால் மழைக்காலங்-களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க, சீர்மிகு நகர திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் மண், குப்பை, பிளாஸ்டிக் கழிவு என மினி குப்பை மேடாக மாறிவரு-கிறது. இந்நிலையில் சேலம் மாநகர பகுதிகளில் பருவமழை முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, கமிஷனர் ரஞ்ஜீத் சிங் உத்தர-விட்டுள்ளார். இதன்படி மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொக்லைன் மூலம் திருமணி-முத்தாறு பகுதிகளில் துார்வாரும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை