வாழப்பாடி: ''பால் கொள்முதல் தொகை, 756 கோடி ரூபாய் நிலுவையை, தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க வேண்டும்,'' என, மாநில தலைவர் ராஜேந்திரன் வலியுறுத்தினார்.சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர் சங்க, மாவட்ட செயற்குழு கூட்டம், வாழப்பாடியில் நேற்று நடந்-தது. தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காந்தி முன்-னிலை விகித்தார். இதில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலர் கணேசன், மாவட்ட செயலர் ஜெயக்-குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பாபு, நிர்வாகிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதா-வது: ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு, பால் வழங்கும் உற்-பத்தியாளர்களுக்கு, அரசு நிதி உதவியாக அறிவித்த லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகை, 75 நாட்களாக வழங்கப்ப-டவில்லை. பால் கொள்முதல் தொகை, 756 கோடி ரூபாய் நிலுவை தொகையை தாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். இரு தொகைகளையும் கொடுக்கும்படி கேட்டுக்-கொள்ளப்படுகிறது.சங்க பணியாளர், 1983 முதல், பணி வரைமுறைப்படுத்தப்ப-டாமல் உள்ளனர். ஏறக்குறைய, 25,000 பணியாளர்களின் வாழ்-வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, சட்டப்படி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பணி நிபந்தனையில் இருந்து விதிவிலக்கு அளிக்க, அவசர சட்டம் இயற்றி, எங்கள் வாழ்வாதாரத்தை காப்-பாற்ற வேண்டும் உள்பட, 9 கோரிக்கைகளை அரசுக்கு முன்-வைத்துள்ளோம். முதல்வர், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.