உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சில் சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபருக்கு வலை

பஸ்சில் சந்தனக்கட்டை கடத்தல் தப்பி ஓடிய வாலிபருக்கு வலை

சேலம்:சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், நேற்று காலை, 9:00 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர், பரிசோதனை செய்ய வந்தார். ஆனால் திடீரென, பஸ்சில் இருந்து இறங்கிய ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடினார்.சந்தேகம் அடைந்த பரிசோதகர், பஸ்சில் சோதித்தபோது, ஒரு பையில் சந்தன கட்டைகள் இருந்ததும், அதை அந்த வாலிபர் கொண்டு வந்ததும் தெரிந்தது. பின், 13 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர், வாழப்பாடியில் ஏறியது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை