உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு அதிகாரி வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

அரசு அதிகாரி வீட்டில் ரூ.12 லட்சம் திருட்டு

சேலம்:சேலம், மாசிநாயக்கன்பட்டி, நத்தக்காட்டைச் சேர்ந்தவர் கோகுல்ராஜன், 27. புழுதிக்குட்டை அணையில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார். ஒன்பது மாதங்களுக்கு முன், மனைவியுடன் இங்கு வாடகைக்கு குடி வந்தார்.கடந்த, 6ல் மேச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, மனைவியுடன் சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி, கோகுல்ராஜன் வந்து பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த, 12 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. அவரது புகாரின்படி அம்மாப்பேட்டை போலீசார், மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வாயிலாக சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அரசு அதிகாரி வீட்டில், ரூபாய் 12 லட்சம் இருந்தது எப்படி எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை