உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 30ல் சொர்க்கவாசல் திறப்பு 50,000 லட்டுகள் தயாரிப்பு

30ல் சொர்க்கவாசல் திறப்பு 50,000 லட்டுகள் தயாரிப்பு

சேலம்: சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த, 19ல் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. வரும், 30 அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது. இதனால் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவதற்கான பணியை, ஆண்டாள் திருப்பாவை நண்பர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து குழுவினர் கூறியதாவது: சொர்க்கவாசல் திறப்பன்று, பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்க உள்ளோம். அதற்கு சர்க்கரை 800 கிலோ; கடலை மாவு 400; முந்திரி 200; உலர் திராட்சை 150; நெய் 25; ஏலக்காய், லவங்கம் தலா, 10; பச்ச கற்பூரம் 1 கிலோ; ஆயில் 50 டின் ஆகிய பொருட்களால், 50,000 லட்டுகள் தயாரிக்கும் பணியில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை