உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்

சேலம்,கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அங்கு, ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக, சேலத்தை சேர்ந்த த.வெ.க., தொண்டர்கள், 8 பேர் மீது, கரூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.அதில் முன்ஜாமின் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் வழங்கப்பட்டது.தொடர்ந்து அவர்கள், கரூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 8 பேரும், 'சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 2 வாரத்துக்கு ஆஜராகி, தினமும் காலை, 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்' என உத்தரவிடப்பட்டது.அதன்படி நேற்று, சேலத்தை சேர்ந்த, த.வெ.க., தொண்டர்கள் மணிகண்டன், ஹரிஹரசுதன், அன்புமணி, செந்தில்குமார், தமிழ் அமுதன், பெரியசாமி, சுப்பிரமணி, கவுதமன், ஆகியோர் ஆஜராகி கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ