உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்

மருத்துவமனையில் ரகளை ஒருவர் சிக்கினார்

ஓமலுார், காடையாம்பட்டி, மரக்கோட்டை அருகே ஒண்டிவீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 5 இரவு, மது போதையில் இருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வற்புறுத்தி, சிலர், செவிலியரிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக, 8 பேர் மீது வழக்குப்பதிந்த, தீவட்டிப்பட்டி போலீசார், நேற்று, மேச்சேரி, பொம்மியம்பட்டி காலனியை சேர்ந்த கவுதம், 21, என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ