உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு நீட்டிப்பு

முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் செங்கோட்டைக்கு நீட்டிப்பு

சேலம்:ஈரோடு - நெல்லை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஈரோட்டில் இருந்து, நெல்லைக்கு இயக்கப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கம் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இன்று மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் இரவு, 8:50 மணிக்கு திருநெல்வேலிக்கும், இரவு, 11:10 மணிக்கு செங்கோட்டைக்கும் சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் நாளை காலை, 5:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், 6:25 மணிக்கு திருநெல்வேலிக்கும், மாலை, 3:00 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை