உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்ணை தாக்கிய வழக்கு விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணை தாக்கிய வழக்கு விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

சேலம், பூலாம்பட்டி அருகே வெள்ளரிவெள்ளியை சேர்ந்தவர் குருசாமி, 65. இவரது மகன் சண்முகம், 36. இருவரும் விவசாயம் செய்தனர். இவர்கள், 2013ல் நிலப்பிரச்சனை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த அம்பிகா என்பவரை தாக்கினர்.அவர் புகார்படி, பூலாம்பட்டி போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். சேலம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதனிடையே குருசாமி உயிரிழந்ததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சண்முகத்துக்கு, 5 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெய்சிங் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை