| ADDED : ஆக 21, 2024 06:29 AM
இடங்கணசாலை: சம்பள பிரச்னையால், துாய்மை பணியாளர்கள் சாலை மறிய-லுக்கு முயன்றனர்.சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில், 27 வார்-டுகள் உள்ளன. 50,000க்கும்ற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு குப்பை சேகரிக்க, 65 பேர் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூ-லியில் பணிபுரிகின்றனர்.அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதில்லை என கூறி, நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை பணிபுரிய-வில்லை. தொடர்ந்து, 9:30 மணிக்கு, கே.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலுக்கு கூடினர். மகுடஞ்சாவடி போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கலைந்து போகச்செய்தனர்.இதுகுறித்து உள்ளாட்சி துறை துப்புரவு பணியாளர் சங்க சேலம் மாவட்ட பொதுச்செயலர் பெரியசாமி கூறியதாவது: இடங்கணசாலை நகராட்சியில் கமிஷனர் மாறியதால் சம்-பளம் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தினமும், 638 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். .ஆனால், 2022ல் இருந்து தற்போது வரை, 429 ரூபாய் வழங்கி அதிலும் பி.எப்., - இ.எஸ்.ஐ., பிடித்தம் போக, 350 ரூபாய் மட்டும் வழங்குகின்றனர். தினமும், 638 ரூபாய் வழங்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் விரைவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.