உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை, : இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்களுக்கு பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இந்திய குடிமகன்களில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்களுக்கு மத்திய அரசால் அக்., 31 அன்று பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற வயது 18 க்கு மேல் இருத்தல் வேண்டும்.விருதுக்கான விண்ணப்பம், தன் விபரக்குறிப்பு, உரிய ஆவணங்களுடன் https://awards.tn.gov.inஇணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பங்களை ஜூலை 11 அன்று மாலை 5:00 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை