உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 18 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் அழியாத நாயகி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 7 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 11 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும், அதை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை