உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மன்னர் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

மன்னர் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் தமிழ், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், பொருளியல், வரலாறு மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் இரு சுழற்சிகளிலும் உள்ளன.வணிக மேலாண்மை, ஆங்கிலம், தாவரவியல் ஆகியவை முதல் சுழற்சியில் மட்டும் உள்ளன. இப்பாடப் பிரிவுகளுக்கு இணைய வழியாக 19 ஆயிரத்து 264 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இது கடந்த ஆண்டை விட 2 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் கூடுதல். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை மே 29, 30 தேதிகளில் நடந்தது.ஒற்றைச் சாளர முறையிலான முதல் கலந்தாய்வு ஜூன் 10 முதல் நடந்து வருகிறது. இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் நீங்கலாக மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.கட்ஆப் 400 முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கடந்த திங்கள், செவ்வாய் அன்று சேர்க்கை நடந்தது. 249 முதல் 215 வரை இன்றும் 214க்கு கீழ் நாளையும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.ஜூன் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புத் தமிழ் பயின்ற அனைவரும் மற்றும் பகுதி 1 தமிழில் 60 மதிப்பெண் வரை பெற்றவர்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் காலை 9:00 மணிக்கு முன்பாகக் கல்லுாரிக்கு வரவேண்டும். காலதாமதமாக வருவோர் தரவரிசையிலான சேர்க்கை வாய்ப்பை இழக்க நேரிடும்.கலந்தாய்விற்கு வரும்பொழுது பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் 3 நகல்களுடன் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை